Wednesday, December 31, 2025
Wednesday, December 31, 2025
Home » ரஜினிகாந்த் – “சரியான கதை கிடைத்தால் மீண்டும் கமலுடன் நடிப்பேன்”

ரஜினிகாந்த் – “சரியான கதை கிடைத்தால் மீண்டும் கமலுடன் நடிப்பேன்”

by thektvnews
0 comments
ரஜினிகாந்த் - "சரியான கதை கிடைத்தால் மீண்டும் கமலுடன் நடிப்பேன்"

ரஜினிகாந்த்: “சரியான கதை கிடைத்தால் மீண்டும் கமலுடன் நடிப்பேன்”

சென்னை

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட்

செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த், அங்கு செய்தியாளர்களிடம் பேசியார். அப்போது, ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனங்கள் இணைந்து புதிய படம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்திற்கான இயக்குனர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாங்கள் இணைந்து நடிப்போம்

மேலும், “நடிகர் கமலும் நானும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அதற்கான கதை மற்றும் கதாபாத்திரம் கிடைக்கும் போது நாங்கள் இணைந்து நடிப்போம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். இதோடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

banner

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!